நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் 98,722 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,884 ஆகும்.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 630 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
