அரச ஊழியர்கள் இனி எப்படி வேலை செய்வது – சுற்று நிரூபம் வெளியானது..!!!


நாட்டில் கொவிட்-19 ஆபத்து நிலமை காரணமாக அரச ஊழியர்களை கடமைக்கு அமர்த்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கு அமைய இன்று ஏப்ரல் 27ஆம் திகதி தொடக்கம் அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மாதத்தில் 8 நாள் வாரத்தில் இரண்டு நாள்களாக அமையும் வகையில் பணிக்கு சமூகமளிக்காதிருக்க முடியும். இந்த 8 நாள்கள் உத்தியோகத்தரின விடுப்பில் கழிக்காமல் வழங்க முடியும்.

இதனை நடைமுறைப்படுத்த திணைக்களத் தலைவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



 

Previous Post Next Post


Put your ad code here