திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர், காவட்டிகுடா மற்றும் சீன துறைமுகம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் முடக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
Tags:
sri lanka news
