பொன்னாலையில் அநாதரவாக கிடந்த கைத்தொலைபேசிகள் மீட்பு..!!!


பொன்னாலை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு ரப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் மங்களேஸ்வரன் வீதிக்கு திரும்பும் பகுதியில் காணப்படும் நீர்க்குழாய் திருகி அமைப்பட்டுள்ள மூடி அற்ற சீமெந்து கட்டுக்குள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு போடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதி இளைஞர்களால் மீட்க்கபப்ட்டுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் அவை மீட்க்கபப்ட்ட நிலையில் அது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இளைஞர்கள் அறிவித்தமையை அடுத்து , அங்கு வந்த பொலிஸார் அவற்றை தாம் பொறுப்பெடுத்து சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here