நல்லூர் - அரசடி பகுதி மறு அறிவித்தல் வரை முடக்கம்..!!!


யாழ்ப்பாணம் - நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று மாலை முதல் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் இன்று காலை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக இன்று மாலை 6 மணி முதல் அரசடிப் பகுதியைத் தனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

பொதுமக்கள் எவரும் வெளியிடங்களில் இருந்து இப்பகுதிக்கு செல்வதற்கு கந்தர்மடம் சந்தி  நல்லூரடி ஆகிய இடங்களில் இராணுவத்தினரின் கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டு உள்செல்ல அனுமதி  மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது




Previous Post Next Post


Put your ad code here