மக்களுக்கு வழங்கப்படும் உதவிப் பொருட்கள் பிரதேச செயலர் ஊடாகவே வழங்கப்படவேண்டும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொதிகள் வழங்குவோர் இன்றிலிருந்து அந்தந்த பிரதேச செயலர் ஊடாக பிரதேச செயலரின் அனுமதி பெற்ற பின்னரே உதவி பொருட்களை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

