இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 867 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய நாளில் மாத்திரம் மொத்தமாக 1,913 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவே இலங்கையில் ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட அதி கூடிய எண்ணிக்கையாகும்.