இன்றிரவு 11 மணி முதல் நாடளாவிய பயணத் தடை - இராணுவத் தளபதி அறிவிப்பு..!!!


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மீண்டும் இன்று இரவு 11 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்படுவதாக கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 25ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு பதினொரு மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணத் தடை எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here