கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சிறுமிக்கு கொரோனா..!!!


கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர் பிரிவை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்றுள்ளார். அவரை பெற்றோர் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது . அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து உயிரிழந்த சிறுமியின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் போது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதனால் சிறுமியின் சடலத்தை கொரோனா சுகாதார விதிமுறைகளின் படி நாளைய தினம் வவுனியாவில் மின் தகனம் செய்ய உள்ளதாக அறிய முடிகிறது.
Previous Post Next Post


Put your ad code here