இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2,850 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த கொரோனா நோயாளர்களில் அதிகளவானவர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 512 கொரோனா நோயாளரகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

