யாழ்.மாவட்டத்தில் 148 பேர் உட்பட வடக்கில் 313 பேருக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தேசிய கொவிட் தடுப்பு செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் 1ம் திகதி வட மாகாணத்தில் மேலும் 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் - 148 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் - 60 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் - 49 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் - 32 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் - 24 பேருக்கும், என வடக்கு மாகாணத்தில் 313 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.