யாழ்ப்பாணம் மாவட்ட தாதிய உத்தியோகத்தர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தர்கள் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை வைத்தியசாலை முன்றலில் ஈடுபட்டனர்.
நாடுமுழுவதும் 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
அதற்கு ஆதரவாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.