யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்றுத் தொடர்பிலான பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 130 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் எழுமாற்றான பரிசோதனைகளிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,
கிளிநொச்சியின் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான (RAT) பரிசோதனையில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12பேர்,
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேருக்குத் தொற்று
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்,
மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 35
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர்,
மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்
வவுனியா மாவட்டத்தில் 15 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,
சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்
கிளிநொச்சி மாவட்டத்தில் 04
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 02 பேர்,
அக்கராயன் குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் உட்பட்டவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.