யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சைக்களத்தில் வைத்தியசேவை பெறும் நோயாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக,
இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சைக்களத்தில் வைத்தியசேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள் தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
எனவே இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துப் பொருட்களை,
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தபால் மூலம் வீடுகளில் இருந்தவாறு தமக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் குறித்த செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டடிய தொலைபேசி இலக்கங்கள்
021 221 4249
021 222 2261
021 222 3348