கொரோனா சடலத்தோடு சென்ற வேன் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு..!!!


கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலமொன்றை ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி வரை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற வேன் வாகனம் ஒன்று இன்று (05) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் 4 அதிகாரிகளும், மேலும் 2 நபர்களும் மற்றும் சாரதியும் இருந்துள்ளனர்.

குறித்த வேன் வாகனம் ஹட்டன் மற்றும் கினிகத்தேனைக்கு இடையில் 59ஆவது மைல் கல் அருகே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணி அளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 79 வயதுடைய பெண் ஒருவரின் சடலத்தை இன்று  ஹட்டனில் இருந்து ஓட்டமாவடிக்கு கொண்டு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குறித்த சடலம் கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 

 

Previous Post Next Post


Put your ad code here