நாடுதிரும்பிய 12 பேர் உட்பட 3410 பேருக்கு கொரோனா தொற்று..!!!


வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் மேலும் 12 பேர் உட்பட நேற்றைய தினம் 3,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்றயை தினம் (ஜூன்-04) புதுவருடக் கொத்தணியில் 3,398 தொற்றாளர்களும், நாடுதிரும்பிய இலங்கையர்கள் 12 பேருமாக இவ்வாறு 3,410 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை (முதன் முதலில் தொற்று உறுதி செய்யப்பட்ட சீன பெண் உள்ளடங்கலாக) 199,254 ஆக அதிகரித்து 2 இலட்சத்தை நெருங்கியுள்ளது.
நேற்றைய தினம் பதிவாகிய தொற்றாளர்களில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 602 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 538 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக 48 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 1,658 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 33,317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here