வல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்தது கப் ரக வாகனம்..!!!


வல்லை கடல் நீரேரிக்குள் பாய்ந்து கப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியது.

இன்று யாழ் குடாநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள வல்லை பாலத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனமே பாலத்தில் ஏற்பட்ட சறுக்கல் தன்மை காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்து கடல் நீரேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி பகுதியில் இருந்து பருத்தித்துறைக்கு வெங்காயம் ஏற்றுவதற்கு வந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியான ஒலுமடு நெடுங்கேணி பகுதியினை சேர்ந்த செல்வசந்தின் ரகுநேசன் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மழை நேரத்தில் குறித்த வல்லை பாலத்தில் நீண்டகாலமாக விபத்துக்கள் இடம்பெறும் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் குறித்த பாலத்துக்கு அண்மையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here