முல்லைத்தீவில் முதலாவது கோவிட்-19 நோயாளி உயிரிழப்பு..!!!


முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளாகி முதலாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம், ரட்பாணவைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

நீண்டநாள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மூச்சுத் திணறல் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இரண்டு நாள்களின் பின் சிகிச்சை பயனின்றி இன்று காலை 7 மணிக்கு அந்த நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முதலாவது கோவிட்-19 நோயாளி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here