இரத்தினபுரி - கொலொன்ன-கெம்பனே கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்கவில்லை எனக் கூறி பெண் சமுர்த்தி அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்.
அப்பிரதேசத்தின் விகாரையொன்றில் இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுக்கு அந்த கொடுப்பனவை வழங்க சமுர்த்தி அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோபமடைந்த குறித்த பெண் இரும்புக் கம்பியொன்றினால் அவரை தாக்கியுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
தாக்கப்பட்ட சமுர்த்தி அதிகாரி சிகிச்சைக்காக கொலொன்ன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news