பருத்தித்துறை நகரம் முடக்கம்..!!!


பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மருந்தகங்கள் உள்பட அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் திறக்க முடியும். பருத்தித்துறை நகரில் இருந்த பேருந்து தரப்பிடம் மூடப்பட்டுள்ளதால் டிப்போ சந்தியிலிருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

இந்த கட்டுப்பாடுகள் உடன் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் மூவருக்கு தொற்று உள்ளமை இன்று அன்டிஜன் பரிசோதனையில் தெரியவந்தது. அதனையடுத்து சந்தை முடக்கப்பட்டது.

பருத்தித்துறை பெருநகர், 401 கிராம அலுவலகர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெரு, தும்பளை வீதி, பத்திரகாளி வீதி, வீ எம் வீதி, கடற்கரை வீதி, கொட்டடி வீதி அனைத்திலிருந்து நகருக்குள் உள் நுழைய முடியாது
Previous Post Next Post


Put your ad code here