பருத்தித்துறையில் தேர் திருவிழாவில் பங்கேற்ற கொரோனா தொற்றாளர்கள்..!!!




பருத்தித்துறை சிவன் கோவில் தேர் திருவிழாவில் கொரோனா தொற்றாளர்களும் பங்கேற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று தீர்த்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க சுகாதாரப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள சிவன் கோவில் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் ஆலய திருவிழாக்களை 150 பேருடன் நடத்தலாம் என்று திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளிவந்ததை அடுத்து தேர்த்திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், பருத்தித்துறை 1-ஆம், 2-ஆம், 3-ஆம் குறுக்குத்தெருவில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தது. இதன் போது குறித்த பகுதியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிலர் பருத்தித்துறை சிவன் கோவில் தேர் திருவிழாவில் பங்கேற்றிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்தே, சிவன் கோவில் தீர்த்த திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவுறுத்தல் நேற்று இரவு 10 மணியளவில் ஆலய நிர்வாகத்திற்கு சுகாதரப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று தீர்த்த திருவிழாவானது ஆலய பூசகர்கள், நிர்வாகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் ஆலயத்திற்குள்ளாகவே நடத்துவதற்கு சுகாதரப் பிரிவினரால் நடவடிக்க முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் பங்கேற்ற தேர் திருவிழாவில் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Put your ad code here

Previous Post Next Post