நயினாதீவு வருவதை தவிர்க்குமாறு அடியவர்களிடம் கோரிக்கை..!!!


கொரோனோ பெருந்தொற்று காரணமாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தினுள் மறுஅறிவித்தல் வரையில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஆலய அறங்காவலர் சபை அறிவித்துள்ளது.

அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று (covid-19) தாக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ஆலயத்திற்குள் அடியார்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைத் தெரிவிப்பதுடன் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை முற்றாக தவிர்த்து தங்கள் இல்லங்களில் இருந்து அம்பாளை மனக்கண்ணினால் வேண்டி வழிபாடு செய்யுமாறு கேட்டு கொள்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here