இலங்கையில் கொரோனா அவல நிலை அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் 313 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டு வரும் நாளாந்த கொவிட்-19 மரணங்கள் தொடர்பான அறிக்கைகளின் அடிப்படையில் இவ்விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
ஓக்ஸ்ட் - 01 - 63 பேர்
ஓக்ஸ்ட் - 02 - 74 பேர்
ஓக்ஸ்ட் - 03 - 82 பேர்
ஓக்ஸ்ட் - 04 - 94 பேர்
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 4 நாட்களில் பதிவாகியுள்ள கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 313 பதிவாகியுள்ளன.
இதேவேளை தற்போதைய நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களுடைய மொத்த எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் 1388 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் 4 நாட்களிலேயே 313 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news