தடுப்பூசி அட்டை வைத்திருப்பது கட்டாயமா?


பொதுமக்கள் தடுப்பூசி அட்டையையின்றி வெளியில் செல்வதற்கு தடை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான சட்ட நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியான அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதன் பின்னர் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தடுப்பூசி செலுத்தாமல் வீடுகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here