கொரோனாவால் அதிகளவான சிறுவர்கள் உயிரிழப்பதற்கு இதுவே காரணம்..!!!


கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்கள் உயிரிழப்பதற்கான காரணம் தொடர்பில் சிறுவர்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கபில ஜயரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களை தாமதமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றமையே, சிறுவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதற்கான பிரதான காரணம் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 53,000 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளான சிறார்கள் 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த வருடத்தில் 2 சிறுவர்கள் மாத்திரமே உயிரிழந்துள்ளதாகவும், இந்த ஆண்டிலேயே எஞ்சிய 62 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here