Monday 4 October 2021

இந்த வார ராசிபலன் – 04.10.2021 முதல் 10.10.2021 வரை..!!!

SHARE

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் வரும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனதில் புதிய ஆசைகள் உண்டாகும். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக்கூடாது. அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். உங்களுடைய பொருட்களை நீங்களே பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். சொந்த தொழிலில் நல்ல லாபம் உண்டு. அதிக வட்டிக்கு மட்டும் வெளியிடங்களில் கடன் வாங்க வேண்டாம். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். இந்த வார இறுதியில் எதிர்பாராத நல்ல செய்தி உங்கள் செவிகளை வந்து சேரும். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களை எதிர்த்து போட்டியிடுபவர்களை வென்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலை செய்யும் இடத்திலும் சரி, சொந்த தொழிலிலும் சரி உங்களுக்கு தான் முதல் இடம். உங்களை சுற்றி இருப்பவர்களிடத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உங்களுக்கு உயர்ந்து கொண்டே செல்லும். பயணங்களின் மூலம் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். இந்த வார இறுதியில் அவ்வபோது குடும்பத்தில் சில பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனை இல்லை. வரக்கூடிய அமாவாசை திதி அன்று முன்னோர் வழிபாட்டை மறக்க வேண்டாம்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கப்போகிறது. வருமானம் எவ்வளவு தான் வந்தாலும் கையில் தாங்காது. இந்த மாத இறுதியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையைக் காட்டி நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். சொந்த தொழிலில் நீங்களே எதிர்பாராத சில நல்ல விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தை தவிர்த்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த வாரத் தொடக்கத்தில் எதிர்பால் பாலினத்துடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அமாவாசை தினத்தில் உங்களால் முடிந்த உதவியை ஏழை எளியவர்களுக்கு செய்வது நன்மை தரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் திருப்தியாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை உங்கள் வீட்டு விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியில் சென்று நேரத்தைக் கழிப்பதற்கு வாய்ப்புகள் அமையும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. இருப்பினும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பல பிரச்சினைகள் இந்த வாரம் ஒரு முடிவுக்கு வரும். கடன் சுமையில் இருந்து வெளியே வரப் போகிறீர்கள். நிரந்தரமாக நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நல்லபடியாக நடக்க தொடங்கும். இதுவரைக்கும் வேலையில் இருந்த பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சொந்தத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்‌. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகி பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குலதெய்வதிற்க்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் சோர்வாக தான் இருப்பீர்கள். எந்த வேலையை செய்தாலும் அதில் பெரிய அளவில் வெற்றியை காண முடியாது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் செய்த வேலைக்கு கூட அடுத்தவர்கள் நல்ல பெயரை தட்டிச் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற திடீர் செலவுகள் ஏற்படும். வருமானத்தில் பற்றாக்குறை உண்டாகும். சின்ன சின்ன சிக்கல்கள் அவ்வப்போது குடும்பத்தில் வந்து போகத்தான் செய்யும். இந்த வாரம் லேசான மந்தமான போக்கு நிலவும். தினம்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். அடுத்த வாரம் இரட்டிப்பு மடங்காக நல்ல பலனை பெறுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு முடிவையும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுங்கள். அவசரமாக முடிவை எடுத்தால் அது உங்களுக்கு நல்லது கிடையாது. வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தினமும் ஸ்ரீராமஜெயம் சொல்லிக்கொண்டே இருந்தால் பல நன்மைகள் நடக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்களே எதிர்பாராத பல நல்லது நடக்கப் போகின்றது. இவ்வளவு பெரிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்குதா, என்று ஆச்சரியப்பட போகிறீர்கள். சந்தோஷத்திற்கு எல்லையை போட முடியாது. அந்த அளவிற்கு துள்ளிக்குதிக்க போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் பல பாராட்டுகள் வந்து குவியும். கடன் வாங்குவதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உஷார். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகப்படியான முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு வேலையையும் தொட்ட உடனேயே செய்து விட முடியாது. பலமுறை முயற்சி எடுத்தால்தான் அந்த வேலை உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களை சுற்றியிருப்பவர்களின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள், பிரச்சனைகள், சண்டைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து நீங்கள் தள்ளியே இருந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. இந்த வாரம் பொறுப்புகளின் சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். என்ன செய்வது சமாளித்து தான் ஆக வேண்டும். மன உறுதியோடு செயல்படுங்கள். குலதெய்வ வழிபாடு கை கொடுக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாரமாக இருக்கப்போகின்றது. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வேலையை தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் குவிய போகின்றது. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. முடிந்தவரை வீண் விவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உறவினர்களுக்கிடையே சின்ன சின்ன மோதல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்தால் உங்களைவிட ஒரு அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடை படுத்துவது உங்களுடைய சோம்பல் தான். கூடுமானவரை உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக செய்யத் தொடங்குங்கள். நாளை பார்க்கலாம் நாளை பார்க்கலாம் என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள். அதுதான் உங்களுக்கு பிரச்சனையே. குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டு சொந்த விஷயங்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

SHARE