225 தலைமை பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு..!!!
2014 ஆம் ஆண்டு தரமுயர்வுக்கான தகுதியை பெற்று, உயர்வு வழங்கப்படாமலிருந்த 225 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள், பிரதி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்த்தப்படவுள்ளனர்.
அதற்கமைய, 2014 ஆம் ஆண்டு தரமுயர்வை எதிர்பார்த்திருந்த குறித்த தலைமை பொலிஸ் பரிசோதகர்களை உடனடியாக உதவி பொலிஸ் பரிசோதகர்களாகத் தரமுயர்த்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில், இவ்வாறு பெருந்தொகையானோர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாகத் தரமுயர்த்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.