எல்லவல அருவியில் குளிப்பதற்காக சென்ற தந்தையும் 2 பிள்ளைகளும் உயிரிழப்பு..!!!


வெள்ளவாய பொலிஸ் பகுதியில் எல்லவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (20) மதியம் எல்லவல நீர்வீழ்ச்சிக்கு சென்று அருவியைக் காணச் சென்றனர். அங்கு அவர்கள் நீராடிய போதே நீரிழ் மூழ்கி உயிரிழந்தனர் என்று பொலிஸார் கூறினர்.

காத்தான்குடியில் வசிக்கும் 38 வயதான தந்தை, 15 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கியவர்களை மீட்க அப்பகுதி இளைஞர்கள் குழு முயன்றும் பயனளிக்கவில்லை.

உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Previous Post Next Post


Put your ad code here