2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!!!




இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்து தெஹயத்தகண்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் மகியங்கனை திம்புலாகல பிரதான வீதியின் கலுகெலே பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மகியங்கனை திம்புலாக பிரதான வீதியின் திம்புலாகல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அதில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here