தாய்வானில் பாரிய தீ விபத்து! 46 பேர் பலி..!!!


தாய்வானின் தெற்கு பகுதியிலுள்ள 13 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயொசியங் பகுதியில் உள்ள 40 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மற்றும் புகையால் பாதிக்கப்பட்ட சுமார் 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Previous Post Next Post


Put your ad code here