மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி..!!!


மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்தி‍லேயே உயிரிழந்துள்ளதுடன், அதில் பயணித்த மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மேற்கொண்டுள்ள முதல் கட்ட விசாரணையில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆதம்பாவை முகமது அம்ஹர் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்துக்குள்ளான காரின் சாரதியையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here