Sunday 10 October 2021

விமானநிலையங்களின் பாதுகாப்பு - உருவாக்கப்பட்டது புதிய படைப்பிரிவு

SHARE


 
விமான நிலையங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய படைப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் புதிதாக நிறுவப்பட்ட இந்த பிரிவின் தொடக்க விழா விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.

இந்த படைப்பிரிவு அமைப்பதன் முக்கிய நோக்கம் இலங்கை விமான நிலையங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் ஏதாவது அவசர காலங்களில் நம்பிக்கையுடன் செயல்படுவது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அணியில் அவசர காலங்களில் நடவடிக்கைகளில் ஈடுபடு் வகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர்.
SHARE