இந்தியாவின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை பார்வையிட்டுள்ளார்.
நேற்றையதினம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போதே யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் வருகை தந்திருந்தமை குறியிடத்தக்கது.