நோர்வேயில் அம்பு , வில் தாக்குதல் : 5 பேர் பலி, 2 பேர் காயம் ..!!!
அம்பு மற்றும் வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொன்ங்ஸ்பேர்க் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.