மீசாலை பகுதியில் புகையிரதம் மோதி 10 மாடுகள் உயிரிழப்பு..!!!




புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ் நோக்கி பயணித்துள்ளது. இதன்போது கூட்டமாக பயணித்த மாடுகளை மோதியுள்ளது.

சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிட்டப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here