Tuesday 5 October 2021

‘உடன்பிறப்பே' : கிராமத்து பெண்ணாகவே மாறிய ஜோ..!!!

SHARE

அமேசான் ஒரிஜினலுக்காக ஜோதிகா-சூர்யா இணைந்து தயாரித்திருக்கும் படம் 'உடன்பிறப்பே'. இரா.சரவணன் இயக்கியிருக்கிறார்.

அண்ணன் - கணவனுக்கு இடையில் பாசப்போராட்டம் நடத்துகிற பாசமலராக ஜோதிகா நடித்திருக்கிறார்.

எம்புருஷன் சட்டத்த நம்புறாரு...எங்கண்ணன் சத்தியத்தை நம்புறாரு. நான் ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றேன்" என்று ஜோதிகா சொல்வதை வைத்துப் பார்த்தால், குடும்பத்தில் எதோ ஒருவித பூசல் இருக்கிறது. அது பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நமக்குள் ஏற்படுகிறது.

முன்னோட்டத்தில் கணவன் சமுத்திரக்கனி, மைத்துனர் சசிகுமாரிடம் கொந்தளிப்புடன் "நீங்க பண்ற பாவத்த எல்லாம் என் பிள்ளைக மேல ஏன் எறக்குறீங்க ?"என்று குமுறுகிறபோது பிரச்னையின் வலி, எப்படா படம் வரும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது

இன்னொருபுறம் நரேன் எரிமலையாக வெடிக்கிறார். "என் சொத்து பத்த வித்தாவது அந்த குடும்பத்தை வேரறுப்பேன் "என்கிறார், யார் இவர்? எதற்காக பெருஞ்சினம்? படம் வந்தால்தான் தெரியும்!

ஜோதிகா இந்த படத்துக்கு பெரிய ப்ளசாக இருப்பார் என்பதை அவரது முகமே சொல்லி விடுகிறது. அசல் கிராமத்து தமிழ்ப்பொண்ணு. நடு வகிடு எடுத்து வாரப்பட்ட கூந்தல், அதில் சில நரை முடி ! மங்கள குங்குமம் சற்று மேலே சிறு தட்டையாக சாமி துண்ணூறு ! இரட்டை மூக்குத்தி என்னே அழகு,என்னே அழகு.!

எத்தன நாளைக்கு புருசனுக்கு பயந்துக்கிட்டு இருப்பே ? உங்கண்ணன் கிட்ட நீயாவது பேசு! என்று அந்த தண்டட்டி கிழவி சொன்னதும் ,முகத்தை சற்று தாழ்த்தி "நான் என் புருஷனுக்கு பயந்தேன் ...நீ பாத்தே?" என ஜோதிகா கேட்கிற பாங்கு இருக்கிறதே ....ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என கூற வைக்கிறது.
SHARE