Friday 8 October 2021

வீதியின் குறுக்காக ஓடிய சிறுவன் மீது மோதிய முச்சக்கரவண்டி..!!!

SHARE



மீகொடை, ஆடிகல வீதியின் பானலுவ பிரதேசத்தில் வீதியின் குறுக்காக ஓடிச் சென்ற சிறுவன் முச்சக்கரவண்டியில் மோதி படுகாயமடைந்துள்ளான்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் தற்போது கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் விபத்துக்கு உள்ளாகும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
SHARE