Wednesday 20 October 2021

விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ?

SHARE

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் டொலர் இன்மையால் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாகக் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கனிய எண்ணெய் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமானது கையிருப்பில் உள்ள நிதியைக் கொண்டு நாளாந்தம் எரிபொருளைக் கொள்வனவு செய்துவருவதாகவும், இதனால் விரைவில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
SHARE