Sunday 17 October 2021

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது..!!!

SHARE



திஸ்ஸமஹராம, காவன்திஸ்ஸபுர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த துப்பாக்கிகளை தயாரிக்கும் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகள் இரண்டு, துப்பாக்கி தயாரிக்கும் இயந்திரங்கள் இரண்டு மற்றும் மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE