பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி - சுகாதார பிரிவு அறிவிப்பு..!!!


எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார். மேலும் நவம்பர் 1ஆம் திகதி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here