Monday 4 October 2021

முதலைக் கடிக்கு உள்ளான நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு..!!!

SHARE



கடந்த இரண்டாம் திகதி புல்வெட்டுவதற்கு சென்ற நிலையில் காணாமல் போன ஆண் ஒருவர் முதலைக் கடிக்கு உள்ளாகிய நிலையில் அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஓலுவில் களியோடை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் அட்டடைப்பள்ளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அழகையா ஞானசேகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த இரண்டாம் திகதி வீட்டில் இருந்து மாடுகளுக்கு புல்வெட்டுவதற்காக ஓலுவில் களியோடை ஆற்றின் கரைப்பகுதிக்கு சென்ற நிலையில் வீடுதிரும்பாத அவரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஒலுவில் களியோடை ஆற்றில் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE