Sunday 17 October 2021

விவசாயிகளுக்கான அறிவிப்பு..!!!

SHARE



அரை ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட 3 இலட்சம் ரூபா உதவித் திட்டம் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு கம்பளை பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுற்றுசூழலுக்கு ஏற்ற விவசாய நடவடிக்கைகளுக்காக நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 22 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த உரத் தொகையின் முதல் தொகுதி எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு எடுத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SHARE