நாளாந்தம் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு நாள் சேவையின் கீழ் சேவைகளைப் பெறும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆல் தாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை ஒருநாள் சேவைகளைப் பெறுவோரின் விண்ணப்பங்களின் சராசரி எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் பின் ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதோடு கடந்த 10 நாட்களில் 12,158 பேர் கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளனர். இதே காலப்பகுதியில் 11,242 பேர் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 10 நாட்களில் மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களிலிருந்து 10,145 பேர் சேவைகளைப் பெற்றுள்ளனர்.