Monday 11 October 2021

மாமனின் கையை வெட்டி வீசிவிட்டு நஞ்சருந்திய மருமகன் - கிளிநொச்சியில் சம்பவம்..!!!

SHARE


மாமனாரின் கையை வெட்டித் துண்டாக்கிய மருமகன் நஞ்சருந்திய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இன்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காணி தகராறு காரணமாக மாமனாருடன் முரண்பட்ட மருமகன் மாமனாரின் கையை மணிக்கட்டுக்கும் , முழங்கைக்கும், இடையில் வெட்டியுள்ளார்.

அதனால் கை துண்டாடப்பட்டுள்ளது. துண்டாடப்பட்ட கையை அருகில் இருந்த வாய்க்காலுக்குள் தூக்கி வீசிவிட்டு , அங்கிருந்து சென்று தான் நஞ்சருந்தியுள்ளார்.

தற்போது மாமனும் மருமகனும் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE