தடுப்பூசி தொடர்பில் பல்கலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி..!!!




பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று (11) ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதனிடையே, பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here