Monday 29 November 2021

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த இளம் குடும்பஸ்தர்- குழந்தையுடன் உதவி கரம் கோரும் மனைவி - கிளிநொச்சியில் சம்பவம் ..!!!

SHARE

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், தனது 32 வயதிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், எண்ணற்ற கனவுகளோடு உயிர்வாழப் போராடிக்கொண்டு இருக்கின்றார்.

இந்நிலையில் குடும்பஸ்தரின் உயிரை காப்பதற்கு எவரேனும் தங்களுக்கு உதவுங்கள் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி- புதுமுறிப்பு பாடசாலை முன் வீதியைச் சேர்ந்த செபஸ்தியான்பிள்ளை தேவராசா, தேசிய அடையாள அட்டை இல 198912703797 என்பவரின் மனைவியே கருணையுள்ளம் கொண்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

மேலும் 1 அரை வயது பூர்த்தியாகியுள்ள எனது பிள்ளைக்காகவேனும் உயிர் காக்க உதவுங்கள் என கோரியுள்ளார்.

குறித்த இளம் குடும்பஸ்தர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சத்திரசிகிச்சை செய்வதற்கு 45 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வங்கி கணக்கு இலக்கம்  048200390018363
தொலைபேசி இலக்கம்  0765335356 / 0774293115



SHARE