ஒமிக்ரோன் கொவிட் தொற்றாளர்களின் அறிகுறிகள் வேறுபட்டது..!!!
ஒமிக்ரோன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அறிகுறிகள் வேறுபட்டதாக காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இன்று (30) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது நாட்டில் 62.7% மக்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தடுப்பூசி போடப்பட்டவர்களில் அதிக சதவீதம் மாத்தளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 67% ஆகவும், குறைந்தபட்சம் கிளிநொச்சியில் 32% ஆகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.