Tuesday 30 November 2021

ஒமிக்ரோன் கொவிட் தொற்றாளர்களின் அறிகுறிகள் வேறுபட்டது..!!!

SHARE



ஒமிக்ரோன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அறிகுறிகள் வேறுபட்டதாக காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இன்று (30) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நாட்டில் 62.7% மக்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தடுப்பூசி போடப்பட்டவர்களில் அதிக சதவீதம் மாத்தளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது 67% ஆகவும், குறைந்தபட்சம் கிளிநொச்சியில் 32% ஆகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
SHARE