மன்னாரில் அரிய வகை உயிரினம் ஒன்று மீட்பு..!!!




மன்னார், கோந்தை பிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நீர் தாங்கி இன்று (15) இராணுவத்தினரின் உதவியுடன் தகர்க்கப்பட்டது.

அந்த நீர் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன், நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில், இன்று வெடிப்பின் காரணமாக இறக்கை ஒன்று உடைந்த நிலையில் தாங்கியின் சிதைவுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here