Tuesday 2 November 2021

யாழின் சில பகுதிகளுக்கு வடக்கு ஆளுநர் தீடீர் விஜயம்..!!!

SHARE

வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழிப்பாணத்தின் சில பகுதிகளின் நிலைமைகளை நேரில் சென்று அவதானித்துள்ளாா்.

யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு இன்றைய (02) தினம் நேரில் சென்று அவதானித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , அபிவிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார் .

பகுதிகளுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ் பிரதேச செயலர் மற்றும் அரச உத்தியோகத்தர்களை அழைத்து நிலைமை குறித்தும் கலந்துரையாடினார்.




SHARE