வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ‘பிலவ’ வருட கந்தஷஷ்டி உற்சவம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி 10ம் திகதி சூரசம்கார உற்சவமும் 11ம் திகதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.
சுகாதார துறையினரது அறுவுறுத்தலுக்கு அமைவாக பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் உற்சவத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் ஆலய உத்தியோகபூர்வ “YouTube” தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. ஸ்கந்தஷஷ்டி உற்சவகாலத்தில் உற்சவ நேரங்களின் பொழுது பக்தர்கள் ஆலயத்தினுள்ளும் வெளிவளாகத்திலும் ஒன்று கூடுவதை தவிர்த்து வீடுகளில் இருந்து நேரலையில் முருகப்பெருமானை தமது உள்ளப்பெருங்கோயிலில் தரிசனம் செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொள்கின்றது.
Youtupe தள முகவரி -
https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured